திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்; நடிப்பு அல்ல! - நடிகர் கார்த்தி

author img

By

Published : Nov 4, 2021, 5:40 PM IST

கார்த்தி ட்விட்

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தைப் பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையை வெளிக்கொணர அயராது உழைக்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.

கார்த்தி ட்விட்
கார்த்தி ட்வீட்

இப்படத்திற்கு சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜெய் பீம்' படம் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் 'ஜெய்பீம் - இதுவரை சொல்லப்படாத சமூக அவலத்தை அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் திரைக்குக் கொண்டு வந்து, அந்த பழங்குடி மக்கள் வாழ்வில் இன்று ஒரு மலர்ச்சிக்கு வழி வகுத்த அரிய படைப்பு. திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்! நடிப்பு அல்ல! சந்துரு சார்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.